உலகளவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,000-ஐ தாண்டியது

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது நாளுக்கு நாள் அதன் தாக்கம்  அதிகரித்து கொண்டே இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக பின்பற்றப்படுகிறது.

உலகம் முழுக்க இதுவரை கொரோனாவால் 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட்டுள்ளனர். அதில்  1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா வைரசால்  24000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.