இங்கிலாந்து ஏற்பாடு செய்த இந்தியா குளோபல் வீக்-2020 மாநாடு, நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று வரி நடைபெறும் மாநாட்டில் நேற்று முன்தினம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்துகொண்ட பிரதமர் மோடி இந்தியா, பல சவால்களை கடந்த வரலாற்றை கொண்டுள்ளது.
இந்தியப் பொருளாதாரம் மீள்வதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்தியாவில் தொழில் துவங்க சாதகமான சூழல் உள்ளது. மேலும், சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், இந்த மாநாட்டில் காணொலி காட்சி வழியாக பேசிய அந்நாட்டு இளவரசர் சார்லஸ், இந்தியாவின் நிலையான வாழ்க்கை முறையை குறித்து பேசினார். அப்போது, நிலையான எதிர்காலத்தை உருவாக்குவது எப்படி என இந்தியாவிடம் இருந்து உலக நாடுகள் கற்றுக்கொள்ளலாம் என கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியில் இருந்து உலகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதை மக்கள் பார்க்க வேண்டும். நிலையான வாழ்க்கை என்பதன் முக்கியத்துவம் பற்றி நான் பிரதமர் மோடியுடன் பேசினேன். தங்களை புதுப்பிக்க முயற்சி செய்யும் போது இந்தியாவின் பண்டைய அறிவை உலகம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நேரமாகும். இந்தியா எப்போதும் இதை புரிந்து கொண்டது.
அதன் தத்துவமும், மதிப்புகளும் நிலையான வழியை வலியுறுத்துகின்றன. இந்தியாவில் தரமான கல்வி மற்றும் சுகாதார சேவையை வழங்குவதற்காக முன்னணியில் பணியாற்றி வரும் இந்திய புலம்பெயர்ந்தோர், இங்கிலாந்து ஆசிய அறக்கட்டளை மற்றும் பிற நிறுவனங்களுடன் சமூக நிதியை பயன்படுத்துவதற்கு, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஒத்துழைப்பு அளித்து வருகின்றது என கூறினார்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…