ஆபாசமாக பேசிய இளைஞரை வீடுவரை சென்று போலீசாரிடம் ஒப்படைத்த பெண் ..!

மும்பை விலே பார்லே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் விமான நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது அவருடன் பணியாற்றும் சக ஊழியர் ஒருவர் காரில் ஏற்றிக்கொண்டு ராஜேந்திர பிரசாத் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டுச் சென்று விட்டார்.

அப்பெண் பேருந்து நிலையத்தில் வீட்டிற்கு செல்ல காத்துக் கொண்டிருந்தார்.  அப்போது குடிபோதையில்அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவரிடம் ஆபாசம் பேசினார். மேலும் ஐட்டம் என தரக்குறைவாகவும் கூறி அங்கிருந்து வேகமாக சென்று விட்டார்.

இதனால் கோபமடைந்த பெண் அந்த இளைஞர் பின்தொடர்ந்து அவரது  வீட்டை கண்டு பிடித்தார். அங்கிருந்து தனது கணவருக்கும் , குடும்பத்தினருக்கும் தகவலை கொடுத்துள்ளார். அங்கு வந்த அவர் குடும்பத்தினர் அந்த இளைஞரை பிடித்து விமான நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

author avatar
murugan