கொரோனா அச்சுறுத்தலால் ரத்து செய்யப்பட்ட விம்பிள்டன் டென்னிஸ் போட்டி!

கொரோனா வைரஸ் நோயானது, சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது இந்த நோயால் அனைத்து நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஜூன் 29-ந் தேதி முதல் ஜூலை 12-ந் தேதி வரை லண்டனில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா எதிரொலியால், பெரும்பாலான சர்வதேச விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தற்போது விம்பிள்டன் டென்னிஸ் போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.