‘கின்னஸ் சாதனை படைக்குமா?’- குட்டை இன மாட்டுக்கு வளைகாப்பு…!

புதுக்கோட்டையில் குட்டை இன மாட்டிற்கு வளைகாப்பு செய்த இளைஞர். 

புதுக்கோட்டை திருவப்பூர் அருகே உள்ள கடியாவயல் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக அழிந்து வரும் மாடுகளில் ஒன்றான தஞ்சாவூர் குட்டை இன மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் இந்த குட்டை இன மாட்டிற்கு நான்கரை வயது ஆகிறது.

இந்த நிலையில் தற்போது அந்த மாடு 9 மாத சினையாக உள்ள உள்ள நிலையில் மாட்டிற்கு வளைகாப்பு செய்து அப்பகுதி மக்களை நிகழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஏற்கனவே கேரளாவை சேர்ந்த மகாலட்சுமி என்ற குட்டை இன மாடு 70 மீட்டர் உயரத்துடன் கின்னஸ் சாதனை படைத்தநிலையில், மனோஜ்குமார் வளர்த்து  வரும் இந்த மாடு 68 சென்டிமீட்டர் உயரம் மட்டுமே உள்ளதால் இவர் கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.