ஆளுநரை அமைச்சர்கள் சந்தித்தது ஏன்? – அமைச்சர் பொன்முடி தகவல்

நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி உடனே ஒப்புதல் தர வலியுறுத்தியதாக அமைச்சர் தகவல்.

சென்னை ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ரவியுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் திடீர் சந்தித்து வருகின்றனர். இன்று மாலை ஆளுநர் தேநீர் விருந்து அளிக்க உள்ள நிலையில், அமைச்சர்கள் சந்தித்துள்ளனர். இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நீட் விலக்கு மசோதா, மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத்தேர்வு உள்பட பல்வேறு மசோதாக்கள் ஆளுநர் வசம் உள்ள நிலையில் அமைச்சர்கள் சந்தித்துள்ளனர்.  நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி உடனே ஒப்புதல் தர வலியுறுத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்