அண்ணாமலை ஏன் கோவை நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார்? இவர் என்ன போலீசா? – காமிச்சார் மனோ தங்கராஜ்

ஏன் அண்ணாமலை இன்று கோவை நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார்? இவர் என்ன போலீசா? என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி. 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று கோவையில் கார் வெடி விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கருது தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘கோவை கார் வெடிப்பு நிகழ்வில் மத்திய உளவு துறை தரும் தகவல்கள் அண்ணாமலைக்கு எப்படி தெரியும்? அவருக்கு ஒரு Copy போடப்பட்டதா? உள்துறை அமைச்சகம் மாநில அரசுக்கு அனுப்பும் தகவல் கசிகிறதா? அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏன் அண்ணாமலை இன்று கோவை நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார்? இவர் என்ன போலீசா? சட்டம் ஒழுங்கை இவர்கள் கையில் எடுக்க போகிறார்களா? இவர்கள் நடுநிலையானவர்கள் அல்ல; உண்மையை கண்டறிவது என்பது ஒரு கட்சி, ஒரு சார்பு உடையவர்கள் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment