#BREAKING: 11- ஆம் வகுப்பு எப்போது தொடங்கப்படும்.? – உயர்நீதிமன்றம்.!

தமிழகத்தில் 11- ஆம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி எப்போது தொடங்கப்படும் என அரசு பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாத இறுதியில் 10 வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் 11- ஆம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி எப்போது தொடங்கப்படும் என அரசு பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளது. இந்த விசாரணையை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்