நாங்கள் அதிகாரத்திற்கு வரும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாற்றுவோம் என்று சீமான் பேச்சு.
தமிழ்தாய் வாழ்த்து பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக முதலமைச்சர் முகா ஸ்டாலின் அறிவித்து, அதற்கான அரசாணையை வெளியிட்டார். இதற்கு பலரும் தமிழக அரசுக்கு பாராட்டுகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாங்கள் அதிகாரத்திற்கு வரும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாற்றுவோம் என்றும் வேறு பாடல் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
முழு தமிழ்தாய் வாழ்த்து பாடலையும் பாஜக கொண்டுவர சொன்னால், அதனை பாராட்டத்தான் வேண்டும் என்றும் கூறினார். சீமானுக்கு ஓட்டு போட்டால் பாஜக வந்துவிடும் என்று கூறினார்கள். தற்போது திமுக பாஜகவுக்கு உள்ள சென்றுவிட்டது என விமர்சித்தார். நாம் தமிழர் கட்சி தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டதாக திருவாரூரை சேர்ந்த குமார் என்ற இளைஞரை வாழ்நாள் தந்தையுடன் நாடு கடத்தியது சிங்கப்பூர் அரசு என்று கூறினார்.
திமுகவை தான் அதிகம் எதிர்க்கிறீர்கள் என்று விமர்சனம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அப்படித்தான் எதிர்ப்பேன், இனத்தை கொன்ற துரோகி என்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை எங்கள் அண்ணனுக்கு பிடிக்காது, எனக்கு கருணாநிதியை பிடிக்காது என தெரிவித்தார்.
இதன் பின் செருப்பை தூக்கி காட்டிய விவகாரம் குறித்த கேள்விக்கு, செருப்பை தூக்கி காட்டுவேன் சொன்னத பெருமையா நினையுங்கள். மேடையில் இனி காலனி காட்டமாட்டேன் என்றும் திமுக தான் உண்மையில் சங்கி எனவும் கூறினார்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…