10 ஆம் வகுப்பு தேர்வுக்கான ஹால்டிக்கெட் எப்போது.? – அமைச்சர் தகவல்.!

10 ஆம் பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வழங்கும் தேதி 18 இல் நடக்கும் ஆலோசனைக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வழங்கும் தேதி 18 இல் நடக்கும் ஆலோசனைக்கு பின்னரே அறிவிக்கப்படும் என்று ஈரோடு அருகே கோபிசெட்டிபாளையம் நம்பியூர் சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அந்த பகுதியிலேயே தேர்வு மையம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 

மேலும் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை ஜாக்டோ – ஜியோ புறக்கணித்தாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் ரிஸ்க் எடுத்து தேர்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதனிடையே, மாணவர்கள் நலன்கருதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அறிவிப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கவும் திட்டமிட்டு வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்