துரைமுருகன் ஒருமையில் பேசியது ஏற்புடையதல்ல..கே.பாலகிருஷ்ணன்..!

நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டத்தை தமிழக அரசு ரத்து செய்தது. ஆனால், திமுக சாா்பில் பல ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்  நடைபெற்றது.

இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் காட்பாடி ஒன்றியம், வண்டரந்தாங்கல் கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், தேர்தல் நேரத்தில் கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியிலும் செல்லலாம், பிற கட்சிகள் கூட்டணியில் வந்தும் சேரலாம் . வேட்பு மனுவை திரும்ப பெற்ற பிறகு தான் யார், யார் கூட்டணியில் உள்ளார்கள் என்பது தெரியும் என தெரிவித்தார்.

இந்நிலையில், கூட்டணி கட்சியினரை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஒருமையில் பேசியது ஏற்புடையதல்ல, என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

author avatar
murugan