இரண்டு பேரையும் பிரித்து வைத்திருப்பது பா.ஜ.க-தான் – அமைச்சர் மனோ தங்கராஜ்

ஓநாய் ஆட்டுக்குட்டியைப் பார்த்து அழுத கதையாக பா.ஜ.க இன்று அ.தி.மு.க-வைப் பார்க்கிறது என அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம். 

அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், அ.தி.மு.க-வில் இரு அணிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று பா.ஜ.க விரும்புவதாக கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், முதலில் இந்த இரண்டு அணிகளையும் பிரித்து வைத்திருப்பது யார் எனப் பார்க்க வேண்டும். இரண்டு பேரையும் பிரித்து வைத்திருப்பது பா.ஜ.க-தான். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் என்று ஒரு பழமொழி கூறுவார்கள். அதே போல தற்போது இருவரையும் பிரித்து வைத்து குளிர்காயலாம் என பா.ஜ.க நினைத்திருக்கிறது.

ஓநாய் ஆட்டுக்குட்டியைப் பார்த்து அழுத கதையாக பா.ஜ.க இன்று அ.தி.மு.க-வைப் பார்க்கிறது. அ.தி.மு.க அழிந்தால் நாம் அந்த இடத்தைப் பிடிக்கலாம் என கனவு உலகில் பா.ஜ.க வாழ்ந்துகொண்டிருக்கிறது என  விமர்சித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment