பங்கு சந்தைகளின் நிலவரம் என்ன ?

மும்பை பங்கு சந்தை இன்று காலை நிலவரப்படி 519.11 புள்ளிகள் உயா்ந்து 35,430.43-ஐ தொட்டது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 159.80 புள்ளிகள்   உயா்ந்து 10,471.00-ஐ தொட்டது.

ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி, ஹீரோ மோட்டோகார்ப், டாடா மோட்டார்ஸ், டைட்டன், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் நிதி மற்றும் எல் அண்ட் டி ஆகியவற்றின் பங்குகள் சென்செக்ஸில் உயர்ந்துள்ளது.

ஏசியன் பெயிண்ட்ஸ் , ஹீரோ மோட்டோகார்ப் ,டாடா மோட்டார்ஸ், ஐடிசி லிமிட்டெட், பஜாஜ் ஆட்டோ , டைடன் , ஹெச்டிஎஃப்சி  ஆகியவற்றின் பங்குகள்  நிஃப் டியில் உயர்ந்துள்ளது.