திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் எடுத்த அதிரடியான முடிவு!

திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரம்யா. இவருக்கும் சென்னையை சேர்ந்த கூலி தொழிலாளியான நாகராஜ் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், நாகராஜ் பொருளாதார சிக்கல் காரணமாக, வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனையடுத்து, வீட்டில் தனியாக இருந்த ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு போலீசார் ரம்யாவின் உடலை உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரம்யா ஏற்கனவே ஒருவரை காதலித்து, விருப்பமில்லாமல் இந்த திருமணத்தை செய்தாரா அல்லது நாகராஜ் ஏதேனும் தகராறில் ஈடுபட்டாரா, என சந்தேக மரணம் என இந்த வலக்கை பதிவு செய்து, ரம்யாவின் தாயார் கவுசல்யா மற்றும் அவரது கணவர் நாகராஜிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.