ஆட்சிக்கு வருவது அதிமுக தான் – முதலமைச்சர் பழனிசாமி

ஆட்சிக்கு வருவது அதிமுக மட்டும்தான் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி  அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் வெற்றி பெற்றார் .யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், ஆனால் ஆட்சிக்கு வருவது அதிமுக மட்டும்தான்.
அரசியலை தொழில் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.அண்ணா கண்ட கனவை நனவாக்கவே அதிமுகவை எம்.ஜி.ஆர் உருவாக்கினார், எம்.ஜி.ஆரைப் போன்று யாரும் திரையுலகில் இருந்து வர முடியாது .
வீட்டில் இருந்து கொண்டு பேட்டி கொடுப்பவர் அல்ல எம்.ஜி.ஆர்.பலமான கூட்டணியை அ.தி.மு.க. அமைத்துள்ளது.உள்ளாட்சி மற்றும் சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு இடைத்தேர்தல் வெற்றி முன்னோட்டம்.தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்பதை இடைத்தேர்தல் வெற்றி காட்டியுள்ளது என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.