என்ன ஒரு நல்ல உள்ளம்! பக்ரீத் பண்டிகைக்காக வாங்கிய துணிகளை இலவசமாக வழங்கிய துணிக்கடை வியாபாரி!

தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், 72 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலரை காணவில்லை. மேலும், 2.5 லட்சம் மக்கள் முகாம்களில் தானாக வைக்கப்பட்டுள்ள நிலையில், பக்ரீத் பண்டிகையை கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், துணிக்கடை வியாபாரியான நவ்ஷத் என்பவர், பக்ரீத் பண்டிகை வியாபாரத்திற்காக துணிகளை வாங்கி வந்துள்ளார். அவர் வாங்கி வந்த உடைகளை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக அளித்துள்ளார். இவர் கொச்சி பிராட்வெ தெருவில் துணி கடை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த வருடம் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, இதை நான் செய்தென். இப்போதும் செய்கிறேன். இவை கடவுளால் கொடுக்கப்பட்டது. அதை மக்களுக்கு திருப்பி கொடுக்கிறேன். இதனால் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.