பாஜக எம்எல்ஏ சுவேந்து அதிகாரிக்கு மேற்கு வங்க சிஐடி போலீஸ் சம்மன்!

மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரிக்கு கொல்கத்தா சிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

பாஜக எம்எல்ஏவும், மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு அதிகாரி கடந்த 2018-ம் ஆண்டு உயிரிழந்த வழக்கில், விசாரணை நடத்த மாநில குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். அதில், சுவேந்து அதிகாரி நாளை காலை சிஐடி போலீஸார் அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேற்குவங்க நந்திகிராம் பாஜக எம்எல்ஏ சுவேந்து அதிகாரியின் பாதுகாப்பு அதிகாரி சுப்ரபிரதா சக்கரவர்த்தி கடந்த 2018ம் ஆண்டு, தனது சர்வீஸ் ரிவால்வரை பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக கூறப்பட்டது.  சக்கரவர்த்தியின் மனைவி தனது கணவரின் மரணம் குறித்து விசாரணை நடத்த கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

விசாரணையின் ஒரு பகுதியாக 11 போலீசார் உட்பட 15 பேரை சிஐடி இதுவரை விசாரித்த நிலையில், தற்போது சுவேந்து அதிகாரிடம் விசாரணை நடத்த நேரில் ஆஜராகும்படி கொல்கத்தா சிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்