2021 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை இன்றே துவங்குவோம்- அதிமுக தலைமை அறிவிப்பு

தேர்தலுக்கான பணிகளை இன்றே துவங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் அக்கட்சியை தொடங்கிய நாள் அக்டோபர் 17ஆம் தேதி ஆகும்.அதிமுக தொடங்கி  48 ஆண்டுகள் நிறைவடைகிறது .49-வது  ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில்,அதிமுகவின் பொன்விழா ஆண்டின் போதும், கழகமே ஆட்சியில் இருக்க சபதம் ஏற்போம்.”பொன்விழா ஆண்டிலும் அ.தி.மு.க ஆட்சியை பிடிக்கும்- சாதனை படைப்போம்” .2021 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை இன்றே துவங்க வேண்டும்.அ.தி.மு.க-வுக்காக உழைத்த, தியாகம் செய்தவர்களுக்கு நன்றி”  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.