அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டோம் – அண்ணாமலை

அதிமுக சார்பில் ஒரே வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தான் பாஜகவின் விருப்பம் என அண்ணாமலை பேட்டி. 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக சார்பில் ஒரே வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது தான் பாஜகவின் விருப்பம். வெற்றி வாய்ப்பை பெற இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது அவசியம். பிரிந்து தேர்தலை சந்தித்தால் வெற்றி வாய்ப்பு குறைய வாய்ப்புள்ளது.

அதிமுக உட்கட்சி பிரச்சினையில் தலையிடக் கூடாது என்பதே பாஜகவின் நோக்கம். ஓபிஎஸ் இபிஎஸ் இரு தரப்புக்கும் சண்டையை மூட்டி குளிர்காயமாட்டோம். வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரிக்க வேண்டும் என ஓபிஎஸ் இடம் வலியுறுத்தினோம்.

irattaiilai

அவர் சில கோரிக்கைகளை முன்வைத்தார். பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.  வேட்பாளர் தேர்வில் ஓபிஎஸ் நல்ல முடிவை எடுப்பார், இன்று மாலைக்குள் நல்ல முடிவு கிடைக்கும்.

பழனிசாமி தரப்பு வேட்பாளர் அந்த தொகுதிக்கு ஏற்கனவே பரிச்சயமானவர். இருமுறை எம்எல்ஏ-வாக தேர்வானவர். தேர்தல் அறிவித்தவுடன் பாஜக போட்டியிடாது என இரண்டு தலைவர்களிடம் தெரிவித்து விட்டோம். இடைத்தேர்தலில்  பாஜக சார்பாக வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை. சுயேச்சை வேட்பாளருக்கு பாஜக ஒருபோதும் ஆதரவு அளிக்காது.  இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இன்று மாலைக்குள் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment