நாங்கள் வரிசையில் முதல் நிற்கிறோம்.., அடுத்து நீங்கள் தான் .., உக்ரைன் ஜனாதிபதி பேச்சு..!

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், இந்த போரில் ஏராளமான உக்ரைன் நாட்டு மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மற்ற பிற நாடுகள் தங்களுக்கு ஆதரவாக கை கொடுக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

தற்போதும் இது குறித்து பேசியுள்ள வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யா தெற்கு உக்ரேன் முழுவதையுமே கைப்பற்ற விரும்புவதாகவும், அதுமட்டுமல்லாமல் இதனை அடுத்து மற்றொரு நாடுகளை  ஆக்கிரமிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே, தற்போது அனைத்து நாடுகளும் எங்களுடன் இணைந்து போராட வேண்டும். இப்பொழுது நாங்கள் முதல் வரிசையில் நிற்கிறோம் அடுத்தது யார் என்று தெரியாது. எனவே, அனைவரும் இணைந்து போராட்ட வேண்டும் என கூறியுள்ளார்.

author avatar
Rebekal