இன்றைய தர்மயுத்தம் இதுதான்..! பழனிசாமி அணியுடன் பேச தயாராக இருக்கிறோம் – ஓபிஎஸ்

இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கினால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவோம்  பேட்டி.

பன்னீர்செல்வம் அவர்கள் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுகிறோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை உள்ளதால் போட்டியிடுகிறோம். இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன் என தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக நான் கையெழுத்திட்டேன் பழனிசாமி தான் கையெழுத்திடவில்லை. அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சியினரும் எங்களுடனும் பேசி வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் நாங்கள் ஆதரவு தருவோம். மேலும் இணைந்து செயல்படுவதற்கு பழனிசாமி அணியுடன் பேச நாங்கள் தயாராக இருக்கிறோம். எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பொறுப்பு பேரவை விதிகளில் இல்லை என சபாநாயகர் கூறிவிட்டார்.

அப்படி இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கினால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவோம். அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடங்க நான் எப்போதும் காரணமாக இருக்க மாட்டேன். அதிமுக விதிகளின்படி கட்சி நடக்க வேண்டும் என்பதுதான் இன்றைய தர்மயுத்தம்  என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment