இரண்டு துறைகளின் ஊழல் ஆதரங்களை வெளியிட உள்ளோம் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் நம்பர் 1 கட்சியாக பாஜகவை மாற்றுவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி.

திருச்சியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இரண்டு துறைகளின் ஊழல் ஆதாரங்களை வரும் 3 அல்லது 4-ஆம் தேதி வெளியிட உள்ளோம் என தெரிவித்தார். ஊழல் பட்டியல் வெளியிடுவதன் மூலம் திமுக தலைமையிலான அரசு திருந்திக் கொள்ள வேண்டும் என்றும் திமுக ஆட்சியை கவிழ்ப்பது எங்கள் நோக்கம் கிடையாது எனவும் கூறிய அவர், அமைச்சர் பொன்முடிக்கு புதிய கல்விக் கொள்கை குறித்த புரிதல் இல்லை, புதிய கல்விக் கொள்கை குறித்து அவர் முழுவதும் படிக்கவில்லை எனவும் விமர்சித்தார்.

தமிழகத்தில் பாஜக தான் பிரதான எதிர்க்கட்சி என சமூக வலைத்தளத்தில் பிரச்சாரம் செய்யப்படுவதாக அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. அனைத்து தலைவர்களுக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது. நம்பர் ஒன் கட்சி என்பது தான் அனைவரின் இலக்கு எனவும் அண்ணாமலை தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் பாஜகவை நம்பர் 1 இடத்திற்கு கொண்டுவர கடுமையாக உழைத்து வருவதாகவும், இதற்காக பாடுபடுவோம் எனவும் கூறினார்.

மேலும், இதனைத்தொடர்ந்து பேசிய அவர், சசிகலா பாஜகவிற்கு வந்தால் சேர்த்துக் கொள்வோம் என்ற நயினார் நாகேந்திரன் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து, கட்சியின் கருத்து அல்ல என்றும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment