பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல புதுமுங்கள் வந்துவிட்டனர். இதில் ஒரு சில வந்த ஒரே வாரத்தில் வீட்டிற்கு சென்றும் விட்டனர்.
இந்நிலையில் ஆரம்பத்திலிருந்து தற்போது வரை இருப்பது சினேகன், கணேஷ், ஆரவ் வையாபுரி ஆகியோர் தான்.
இதில் சமீபத்திய டாஸ்க்கில் ஒரு காரில் எல்லோரும் அமர வேண்டும் யார் கடைசி வரை இருக்கிறார்களோ, அவருக்கு கூடுதல் 10 மதிப்பெண் என்று தெரிவித்தனர்.
இந்த போட்டியில் கடைசியாக ஒரு காலை தொங்கப்போட்டு இருக்க வேண்டும் என்று கூற, சினேகன், சுஜா இறுதிவரை இருந்தனர்.
சினேகன் இரண்டு காலையும் பயன்படுத்தியதாக கணேஷ் பிக்பாஸிடம் புகார் கொடுக்க, இது சினேகனை மிகவும் கோபப்படுத்தியது, அதை தொடர்ந்து இருவருக்கும் சண்டை வெடித்தது, பிறகு என்ன ஆனது என்பதை இன்றைய பிக்பாஸ் பார்த்தால் தெரியவரும்.