வி.பி. காஞ்சி வீரன்ஸ் அணி 2 விக்கெட்டை இழந்து தடுமாறி விளையாடி வருகிறது!

இன்றைய நான்காவது  டி .என்.பி .எல் லீக் போட்டியில்  லைகா கோவை கிங்ஸ் Vs வி.பி. காஞ்சி வீரன்ஸ் மோதி வருகிறது.இப்போட்டி திண்டுக்கல்லில் உள்ள என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

லைகா கோவை கிங்ஸ் வீரர்கள்:

அபிநவ் முகுந்த் (கேப்டன் ), பி அனிருத் சீதா ராம், அக்கில் ஸ்ரீநாத், எஸ் மணிகண்டன், பிரடோஷ் ரஞ்சன் பால் (விக்கெட் கீப்பர்), மலோலன் ரங்கராஜன், ஷாருக் கான், எஸ் அஜித் ராம், ஆண்டனி தாஸ், நடராஜன், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

வி.பி. காஞ்சி வீரன்ஸ் வீரர்கள்:

பாபா அபராஜித் (கேப்டன் ), ராஜகோபால் சதீஷ், சுரேஷ் லோகேஸ்வர் (விக்கெட் கீப்பர்), ஆர் சிலம்பரசன், சஞ்சய் யாதவ்,  விஷால் வைத்யா, எஸ் அருண், பி பிரான்சிஸ் ரோகின்ஸ், முகிலேஷ், என்எஸ் ஹரிஷ், ரங்கராஜ் சுதேஷ் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

வி.பி. காஞ்சி வீரன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக விஷால் வைத்யா , முகிலேஷ் ஆகிய இருவரும்  களமிங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே வைத்யா ரன்கள் எடுக்காமல் வெளியேறினர்.இதை தொடர்ந்து முகிலேஷ் ஒரு ரன்னில் அவுட் ஆனார்.

வி.பி. காஞ்சி வீரன்ஸ் அணி 8 ஓவர் முடிவில் 44 ரன்கள் எடுத்து உள்ளது. தற்போது களத்தில் பாபா அபராஜித் 26 ரன்னும் , சுரேஷ் லோகேஸ்வர் 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் விளையாடி வருகின்றனர்.

 

author avatar
murugan