#Breaking : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம்… விறுவிறுப்பான வாக்குப்பதிவு தொடக்கம்.!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 

பொது தேர்தலுக்கு சற்றும் குறையாமல் தமிழகத்தையே எதிர்பார்க்க வைத்த இடைத்தேர்தல் தற்போது தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் 2,27,543 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

வாக்குப்பதிவு தொடக்கம் : 738 வாக்குச்சாவடிகளில் தற்போது தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இதில், வாக்காளர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினை தற்போது செலுத்த தொடங்கியுள்ளனர்.

பலமுனை போட்டி : காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக உட்பட மொத்தமாக 77 வாக்காளர்கள் இந்த இடைத்தேர்தலில் களம் காணுகின்றனர். அதனால் ஒவ்வொரு வாக்குச்சாவடியில் 5 வாக்குபதிவு இயந்திரங்கள் உள்ளன. மொத்தம் 738 வாக்குச்சாவடியில் 33 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என குறிப்பிடப்பட்டு அந்த வாக்கு சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பது அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment