வீசிய முதல் பந்திலே விக்கெட்டை பறித்த தமிழக வீரர் விஜய் சங்கர் !

இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும்  மோதி வருகிறது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி  இறுதியாக 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் குவித்தது.பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் முகமது அமீர் 3 விக்கெட்டை பறித்தார்.
பாகிஸ்தான் அணி 337 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக இமாம்-உல்-ஹக்,
பகர் ஜமான் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து பொறுமையாக விளையாடிய இருவரும் நான்கு ஓவர் முடிவில் 13 ரன்கள் சேர்த்தனர்.
பின்னர் ஐந்தாவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார்.அந்த ஓவரில் நான்காவது பந்தை வீசும் போது கால் தடுமாறியதால் புவனேஷ்வர் குமார் வெளியேற அவருக்கு பதில் விஜய் சங்கர் மீதம் உள்ள இரண்டு பந்து வீச முடிவு செய்தனர்.
விஜய் சங்கர் வீசிய முதல் பந்திலே இமாம்-உல்-ஹக் அவுட் ஆனார்.பின்னர் பாபர் ஆசாம் களமிறங்கினர்.10 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட்டை இழந்து  38 ரன்கள் எடுத்து உள்ளனர்.
 

author avatar
murugan