ஒரே நாளில் மூன்று பட வேலைகளிலும் கலந்துகொண்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான ஹீரோ என்றால் அது எப்போதும் நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதிதான். இவர் நடிப்பில் சங்கத்தமிழன், கடைசி விவசாயி, லாபம், மாமனிதன், துக்ளக் தர்பார், ஒரு தெலுங்கு படம், ஒரு மலையாள படம் என மிக பிசியாக இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்னர், விஜய் சேதுபதி அறிமுக இயக்குனர் டெல்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தின் பூஜை போடப்பட்டது. துக்ளக் தர்பார் என பெயரிடப்பட்ட இப்படத்தில் 96 பட இயக்குனர் பிரேம்குமார் மீண்டும் ஒளிப்பதிவாளராக களமிறங்கி உள்ளார். இப்பட பூஜை நடைபெற்ற அந்த நாளே சங்கத்தமிழன் படத்துக்கான டப்பிங் பணியும், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் மாமனிதன் படத்துக்கான டப்பிங் பணியும் தொடங்கி உள்ளது.

ஒரே நாளில் மூன்று படங்களின் முக்கிய வேலைகளை மேற்கொண்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை கோலிவுட் வியந்து பார்க்கிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.