தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி – சீமான்

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செய்தி கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு ,திமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக சார்பாக ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

இந்நிலையில், இந்த விசாரணையில், சென்னை உயர்நீதிமன்றம், மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டில்ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தர சட்டம் இயற்றலாம்.மேலும் மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரிதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை.மேலும் இது தொடர்பாக 3 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும். இட ஒதுக்கீடு வழங்க சட்டரீதியாக தடை இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்புக்கு அரசியல் கட்சி பிரபலங்கள் பலரும் வரவேற்றுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், அகில இந்திய மறுத்து தொகுப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க மத்திய அரசு சட்டமியற்ற வலியுறுத்தியிருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செய்தி கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தீர்ப்பு வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்காக ஒருமித்து ஓங்கி ஒளித்திட்ட தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.