துணை குடியரசுத்தலைவர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வருகிறார்.!

துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு கடந்த செப்டம்பர் 29-ந் தேதி கொரோனா தொற்று உறுதியான நிலையில், மருத்துவர்கள் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது, இவரது உடல்நிலை குறித்து துணை ஜனாதிபதி செயலக ட்வீட்டர் பக்கத்தில், வெங்கையா நாயுடு உடல்நிலை சீராக உள்ளதாகவும், கொரோனா தொற்று உறுதியானதிலிருந்து வீட்டு தனிமைப்படுத்தலின் போது மருத்துவர்கள் அறிவுரையின்படி, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். இதனால், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருவதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.