#Breaking: மார்ச் 24-ல் தீர்ப்பு..! அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடத் தடை..!

கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு இந்த வழக்கை தொடர உரிமையில்லை.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கிற்கு மார்ச் 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் தேர்தல் நடத்த அனுமதி அளித்த நீதிமன்றம் தீர்ப்பு வரும்வரை முடிவை வெளியிட வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.

இ.பி.எஸ். வேட்புமனு தாக்கல் :

அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கபட்ட நிலையில், நேற்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த நிலையில்,  அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த மனோஜ் பாண்டியன் அவசர முறையீடுசெய்திருந்தார். இந்த முறையீட்டை அவசர வழக்காக மனுதாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் இந்த வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஓ.பி.எஸ். தரப்பு வாதம்:

முன்னதாக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என அறிவித்துவிட்டு இந்த தேர்தலை அறிவித்துள்ளனர். பொதுச்செயலாளர் தேர்தலை தள்ளி வைப்பதால் எதுவும் நடந்து விடாது என்றும் தேர்தலுக்கு தடை விதிக்காவிட்டால் தீர்மானத்திற்கு எதிரான பழைய வழக்கு செல்லாததாகிவிடும் என்று ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்தார். 30 நிமிடங்களுக்கு மேலாக ஓபிஎஸ் தரப்பு வாதங்களை முவைத்த நிலையில் தற்பொழுது இபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இ.பி.எஸ். தரப்பு வாதம்:

அதிமுக உறுப்பினர்களின் மூலம் நடத்தப்படும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு ஓ.பி.எஸ்.க்கு 1% கூட ஆதரவு இல்லை என வாதம் தொடங்கியது. மேலும் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதால், நீதிமன்றம் இதில் தலையிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

வழக்கை தொடர உரிமையில்லை :

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், பிரபாகருக்கு இந்த வழக்கை தொடர அடிப்படை உரிமையில்லை. கட்சி தொடர்பான உரிமையை இழந்தவர்கள் 8 மாதங்கள் கழித்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தேர்தல் கட்டாயம் நடைபெறும் :
ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் இருந்தால் தேர்தல் கட்டாயம் நடைபெறும். பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது. கட்சிக்கு பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டால்தான் கட்சி பிரச்னைகளை கையாள முடியும் என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
தேர்தலை நடத்தலாம்:
இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைமுறைகளை தொடரலாம் என்றும் ஆனால் முடிவை அறிவிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏப்ரல் 11க்கு ஒத்திவைக்கப்பட்ட தீர்மானங்களுக்கு எதிரான பழைய வழக்கை முன்கூட்டியே மார்ச் 22ம் தேதி விசாரிக்க முடிவு செய்துள்ளதாக நீதிபதி கூறினார். இதனையடுத்து அதிமுக பொதுக்குழு தேர்தலுக்கு தடை கோரிய வழக்கிற்கு மார்ச் 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்று நீதிபதி தெரிவித்தார்.
author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment