#BREAKING: மாநிலங்களவையில் வெங்கையா நாயுடு எச்சரிக்கை..!

எதிர்கட்சி எம்பிக்கள் அவையின் மாண்பை குறைக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்தார்.

இன்று மாநிலங்களவை கூடியதும் பெகாசஸ் விவகாரத்திலே உடனடியாக விவாதம்தேவை, விலைவாசி உயர்வு குறித்து விவாதம்தேவை, வேளாண்சட்டத்தை திரும்ப பெறவேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்கட்சி எம்பிக்கள் அவை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து, அவை தலைவர் வெங்கையா நாயுடு,  அவையில் விசில் அடிப்பது, பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபடுவது குறித்த புகார்கள் வருகின்றன. எதிர்கட்சி எம்பிக்கள் அவையின் மாண்பை குறைக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும், அவையின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என கூறி அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.

 

author avatar
murugan