வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய ஆளுநர் கிரண் பேடியை நீக்க வேண்டும் – வைகோ

தமிழக மக்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை நீக்க வேண்டும் என்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தண்ணீர் பிரச்னையில் தமிழகம் தவித்துக் கொண்டு இருக்கின்ற நிலையில், தமிழக மக்களை இழிவுபடுத்துகின்ற வகையில், புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி கருத்து தெரிவித்து இருப்பது வரம்பு மீறியதும், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதும் போன்றது ஆகும் மக்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த புதுச்சேரி ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடியை நீக்க வேண்டும் என்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

author avatar
kavitha