மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி- தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!

  • மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்குசென்று தடுப்பூசி போட கோரி கற்பகம் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
  • மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் திட்டம் பற்றி 2 வாரத்தில் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கொரோனா தொற்று அபாயம் உள்ளதால் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போட கோரி வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

வழக்கறிஞர் கற்பகம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதி  மாற்றுத்திறனாளிகளுக்குவீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் திட்டம் பற்றி 2 வாரத்தில் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

author avatar
murugan