தடுப்பூசி கட்டாயம் இல்லை..? பின்வாங்கிய ஆஸ்திரேலிய பிரதமர் .!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதையடுத்து இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும்,  அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து ஒரு கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசி இப்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த தடுப்பூசிக்காக அஸ்ட்ரா ஜெனேகா  மருந்து நிறுவனத்துடன் ஆஸ்திரேலியா ரூ.135 கோடி மதிப்பில் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இது குறித்து அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசன் நேற்று முன்தினம் பேசும்போது, இந்த தடுப்பூசி மனிதர்கள் மீது நடத்தி வரும் சோதனை வெற்றிகரமாக முடிந்தால் நாம் அதை உற்பத்தி செய்வோம்.

மேலும்,  ஆஸ்திரேலிய மக்களுக்கு  இந்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என  கூறினார். பின்னர், சிறிது நேரத்தில் சிட்னி ரேடியோவுக்கு அளித்த பேட்டியில் ,கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அனைவருக்கும் கட்டாயம் இல்லை என அறிவித்தார். இந்த தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில்  பயன்பாட்டுக்கு கிடைக்கும் என கூறினார்.

 

author avatar
murugan