அக்டோபர் 4-க்குள் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி-கேரளா..!

அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவுள்ளதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கேரளாவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு வரும் அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்கவும் முடிவெடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு முன்னர் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் கேரளாவில் கல்லூரிகள் திறக்க முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.