அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி – டிரம்ப் அறிவிப்பு

2024-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்குகிறார் டொனால்டு டிரம்ப்.

2024-ஆம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதாக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். மீண்டும் அமரிக்காவை சிறந்த மற்றும் புகழ்பெற்றதாக மாற்ற அதிபர் தேர்தலில் போட்டிருக்கிறேன் என்றும் பிரச்சனைகள், தொலைநோக்கு பார்வை மற்றும் வெற்றி குறித்து தனது பிரச்சாரம் இருக்கும் எனவும் கூறினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் 3வது முறையாக போட்டியிட முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க மத்திய தேர்தல் ஆணையத்தில் தனது ஆவணங்களை தாக்கல் செய்த பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். மேலும், தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்குவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, ஏற்கெனவே அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப் கடந்த தேர்தலில் போட்டியிட்டு ஜோ பைடனிடம் தோல்வியை சந்தித்திருந்தார். இந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment