அம்பேத்கரின் கனவுகளை தனது லட்சிய இலக்காக எண்ணி செயல்படுத்தி கொண்டிருப்பவர் பிரதமர் என்று உண்மையை உலகு உணரும்படி உரைத்து கூறிய இசைஞானி இளையராஜாவுக்கு மத்திய இணை அமைச்சர் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் இசையமைப்பாளர் இளையராஜா செய்த குற்றம் என்ன? அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் யாரும் எந்த கருத்தையும் வெளிப்படுத்த கருத்து சுதந்திரம் அனுமதிக்கிறது எனவும் கூறினார்.