உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா!

இந்தி மொழியை நாட்டின் ஒருமைப்பாட்டிற்க்கான முக்கிய அங்கமாக மாறுவதற்கு நேரம் வந்துவிட்டது என மத்திய அமைச்சர் அமித்ஷா  தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற   நாடாளுமன்ற அலுவல் மொழி கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்துள்ளார். அப்போது பேசிய அவர், உள்ளூர் மொழிகளில் வார்த்தைகளை ஏற்று நெகிழ்வாக மாற்றாத வரை இந்தி மொழி பரப்பப்படாது.

அமைச்சரவையின் 60 சதவீத நிகழ்ச்சி இந்தியில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். எனவே ஹிந்தி மொழியை உள்ளூர் முறைகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்துக்கு மாற்றாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal