காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு – காஷ்மீரில் ராணுவ மருத்துவமனை அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழப்பு.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள ராணுவ மருத்துவமனை அருகே அடையாளம் தெரியாத பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இன்று காலை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அடுத்து போலீஸ், பாதுகாப்புப் படையினர் மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் போராட்டம் வெடித்ததாகவும், அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment