கேரளாவில் நிதி நெருக்கடி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இரட்டையர்கள்…!

கேரளாவில் நிதி நெருக்கடி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இரட்டையர்கள். 

கேரள மாநிலம், கடுவாக்குளம் அருகே இடுங்கடி புதுபரம்பில் அப்துல் சலாமின் மகன்களான நிசார் ஹான் மற்றும் நசீர் ஆகிய இரட்டையர்கள் தங்களது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இவர்களது தாய் பாத்திமா தனது மகன்கள் தூக்கில் தொங்குவதை கண்டு, உள்ளூர் வாசிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து, உள்ளூர் வாசிகள், காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். தற்கொலை தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கொரோனா ஊரடங்கின் போது ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக இரட்டையர்கள் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். இருவரும் கிரேன் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தனர். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒரு வருடத்திற்கு முன்பாக இவர்களது வேலை பறிபோனது.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டில் கோட்டயம் நகர கூட்டுறவு வங்கியில் 12 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக பணம் செலுத்தப்படவில்லை. சில நாட்களுக்கு முன்பதாக வங்கியில் இருந்து கடனை திருப்பித் தருமாறு அவர்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. அவர்கள் பாலக்காட்டில் உள்ள தங்கையின் சொத்தை விற்ற பின் கடனை திருப்பித் தருவதாக வங்கியில் இருவரும் பதிலளித்தனர். இருப்பினும் மன வேதனை தாங்க இயலாத நிலையில் சகோதரர்கள் இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.