தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆக-5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!

தூத்துக்குடியில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தங்க தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. 

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் 441-வது தங்கத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை ஆலய கொடியை ஏற்றிய நிலையில், கொடியேற்றத்தின் போது சமாதான புறாக்கள் பறக்க விடபட்டது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், ஆகஸ்ட் 5-ஆம் தேதி தங்க தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவித்துள்ளார். அத்தியாவசிய பணியாளர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.