சுனாமி எச்சரிக்கை : பப்புவா நியூ கினியா தீவில் பயங்கர நிலநடுக்கம்!

பப்புவா நியூ கினியா தீவில் பயங்கர நிலநடுக்கம்.

2020-ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே, உலகம் பல பேரழிவுகளை சந்தித்து வருகிறது.  அந்த வகையில், முதலில் சீனாவில் தனது ஆதிக்கத்தை செலுத்திய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.

இதனை தொடர்ந்து, மழை வெள்ளம், நிலநடுக்கம் என அடுக்கடுக்காக பேரழிவுகளை சந்தித்து வருகிற நிலையில், இந்தோனேசியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் 6.9 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.