ஓடும் ரயில் இருந்து இன்ஜின் தனியாக 10 கி.மீ சென்றதால் பயணிகள் பீதி !

விசாகா விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஷ்வரில் இருந்து ஆந்திரா மாநிலம் செகந்திரபாத் வரை பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்தது.அப்போது ஆந்திர மாநிலம் நர்சிபட்டிணம் மற்றும் துனி ரயில் நிலையங்களுக்கு இடையே விசாகா விரைவு ரயில் சென்று கொண்டு இருந்த போது திடீரென என்ஜின் மட்டும் தனியாக பிரிந்து 10 கிலோமீட்டர்  தூரம் வரை சென்றது.Image result for விசாகா விரைவு ரயில்

இதனால் பின்னால் இணைக்கப்பட்ட பெட்டிகள் அனைத்தும் நடு வழியில் நின்றது.  ரயில் நின்றதும் அதிர்ச்சி அடைந்த பயணிகள் தகவல் கொடுத்தனர்.பயணிகள் கொடுத்த தகவலின் பேரில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.என்ஜின் உடன் இணைக்கப்பட்ட பெட்டிகள் எப்படி ஓடும் போது பிரிந்தது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

author avatar
murugan