போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை..!

தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.  காலிப்பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டம், 15-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள், அரசுடன்  பேச்சுவார்த்தையை  கடந்த டிசம்பர் 27 ஆம் தேதியும், ஜனவரி 3 ஆம் தேதியும் நடைபெற்றது.

இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இதனைத் தொடர்ந்து  மீண்டும் பேச்சுவார்த்தை கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமுகமான முடிவுகள் எட்டப்படாததால் திட்டமிட்டபடி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று (9-ம் தேதி) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொங்கல் பரிசு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்..!

வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் ஆஜராகி முறையீடு செய்தார். பொங்கல் நெருங்கி வரும் நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் தெரிவித்தார். அதை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

தலைமை நீதிபதி அமர்வு உத்தரவுப்படி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வரவுள்ளது.

author avatar
murugan