நாளை மறுநாள் விக்கிரவாண்டி தொகுதிக்கான விருப்ப மனு -ஸ்டாலின் அறிவிப்பு ..!

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு இன்று இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா  இடைத்தேர்தலை அறிவித்தார்.இதை தொடர்ந்து   அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி ஆலோசனை  செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை ஸ்டாலின் சந்தித்து பேசினார்.அதில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும் ,  நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில்  காங்கிரஸ் போட்டியிடும்  என ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும் நாளை மறுநாள் விக்கிரவாண்டி தொகுதிக்கான விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் , வருகின்ற 24-ம் தேதி வேட்பாளர் அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.  நாளை முதல் அதிமுக விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
murugan