இன்று 3-வது ஒருநாள் போட்டி : தொடரை கைப்பற்றப்போவது யார் ?

  • இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. 
  • இன்று  3 வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.  

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் 3 டி-20 போட்டிகள் மற்றும் 3 50 ஓவர் போட்டிகள் நடைபெறுகிறது.இதற்காக மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது . இரு அணிகளும் முதலில் டி-20 போட்டியில் விளையாடியது .முதல் போட்டியில் இந்திய அணியும் ,இரண்டாவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியும் வெற்றி பெற்றுள்ளது.தொடரை உறுதி செய்யும் மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது .முதல் ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியும் ,இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியும் வெற்றிபெற்றது.இந்நிலையில் இன்று  3 வது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றும் இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.