இன்றே கடைசி நாள்..!சர்க்கரை அட்டையை குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளுங்கள்..!

ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றுவது இன்றுடன் விண்ணப்பிக்கும் காலஅவகாசம் முடிகிறது.
பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டும் சர்க்கரை மட்டும் பெரும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரிசி வாங்கக் கூடிய குடும்ப அட்டையாக மாற்ற கடந்த நவம்பர் 26-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. பின்பு  இதனை 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. தற்போது குடும்ப கார்டுகளாக மாற்ற இன்றுடன் காலவகாசம் முடிவு அடைகிறது.
இந்நிலையில், மாற்ற விரும்பு பயனாளர்கள் விண்ணப்பத்துடன் ஸ்மார்ட் கார்டு-யின் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு வட்டவழங்கல் அலுவலரிடம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். அல்லது ஆன்லைன் மூலம்  tnpds.gov.in  என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாகப் பரிசீலனை செய்யப்படும். பின்பு சர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைகள் தகுதியின் அடிப்படையில் அரிசி வாங்கும் குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்