வரலாற்றில் இன்று (ஏப்ரல் 20)-முன்னாள் ஆந்திர முதல்வர் பிறந்த தினம் !

முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பிறந்த தினம் இன்று .

சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும் ஆவார்.1995 முதல் 2004 வரை ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். இவரே கூடுதலான நாட்கள் பதவியில் இருந்த ஆந்திர முதலமைச்சர் ஆவார். ஹெரிட்டேஜ் ஃபூட்ஸ் என்ற உணவு நிறுவனத்தை 1992 ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். 2014 இல் நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தெலுங்கானாவை தவிர்த்து, ஆந்திரப் பிரதேசத்தின் ஏனைய பகுதிகளில் பெரும் வெற்றி பெற்றார். புதியதாக அமைக்கப்பட்ட சீமாந்திரா மாநிலத்தின் முதன்முதலில் முதல்வராகப் பதவியேற்றார்.

இவர் முதலமைச்சராக பொறுப்பில் இருந்தபோது பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேர் மற்றும் அமெரிக்க குடியரசுத் தலைவர் பில் கிளின்டன் ஆகியோர் இவரை ஐதராபாத்தில் சந்தித்துள்ளனர். இந்தியா டுடே,தி எகனாமிக் டைம்ஸ்,டைம் (இதழ்) போன்ற இதழ்களின் ஆண்டுச் சிறப்பு விருதுகளையும் உலக பொருளாதார மன்றத்தின் கனவு அமைச்சரவையின் அங்கத்துவத்தையும் வென்றுள்ளார்.தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தேசிய தகவல்தொழிற்நுட்பக் குழுவின் அவைத்தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.