கடலூரில் ஊரடங்கு தளர்த்தப்படாது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.முதலில் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை 21 நாட்களுக்குத்தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னர் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.ஆனால் இன்று முதல் ஒரு சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடலூர் ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதாவது, கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் வருகிறது .எனவே மே 3ஆம் தேதி வரை ஊரடங்கில் தளர்வு இல்லை என்று தெரிவித்துள்ளார்.மேலும் ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.