இன்றைய (30.10.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம் : இன்று பொறுமையாக செயல்களை செய்யவேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். தெய்வீக பாடல்களை கேட்டால் மனம் திருப்தி அடையும்.

ரிஷபம் : உங்கள் புத்திசாலித்தனம் உங்கள் முன்னேற்றத்திற்கு பயன்படும். அதனைக்கொண்டு நீங்கள் சுயமாக முன்னேறுவது இனிமையான வார்த்தைகள் பிறரை திருப்திப்படுத்தும்.

மிதுனம் : இன்று பொறுமையை இழக்க வாய்ப்புள்ளது. கட்டுப்பாடுகளும், அமைதியாகவும் இருக்க வேண்டும். தியானம் மேற்கொள்வது மன ஆறுதலை தரும்.

கடகம் : இன்று உங்களுக்கு ஏற்ற பலன் கிடைக்காது. உங்கள் செயல்களில் தடைகள் ஏற்படும். தேவையற்ற விஷயங்களை எண்ணி கவலைப் படுவதை தவிர்க்க வேண்டும்.

சிம்மம் : சில வெறுப்பான சூழ்நிலைகள் என்றும் உங்களுக்கு ஏற்படும் இருந்தாலும் தெளிவான எண்ணங்கள் கொண்டு அதனை நீக்க வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது உங்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தரும்.

கன்னி: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். பொழுதுபோக்குக்கு ஏற்ற நாள் தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும்.

துலாம் : உற்சாகமான வாய்ப்புகள் உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும். இன்றைய நாளை நீங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விருச்சிகம் : உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் சில சம்பவங்கள் நடக்கலாம். உங்கள் தன்னம்பிக்கை குறையலாம். அதனை எதிர்கொண்டு நம்பிக்கையுடன் செயல்பட்டால் உங்கள் லட்சியத்தை அடையலாம்.

தனுசு : இன்று திறம்பட செயல்பட முடியாது. சில அசௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மகரம் : இன்றும் வறட்சி ஏற்படும் நாள் வாழ்வின் எதார்த்தத்தை புரிந்து கொண்டு வாழ கற்றுக்கொள்ளுங்கள் புதிய அனுபவங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

கும்பம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். அனைத்து விஷயமும் எளிதாகவும், சுமுகமாகவும் நடைபெறும். உங்களின் நேர்மையான அணுகுமுறை மூலம் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள்.

மீனம் : இன்றைய நாள் உங்களுக்கு மந்தமாக இருக்கும். உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும்.

author avatar
murugan